செய்திகள்

பீகாரில் பா.ஜ.க. அலுவலகத்தில் 24 பேருக்கு கொரோனா

பீகாரில் பா.ஜ.க. அலுவலகத்தில் 24 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

பாட்னா,

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பா.ஜனதா மாநில தலைமை அலுவலகத்திற்கு சமீபத்தில் கொரோனா நோயாளி ஒருவர் வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அங்குள்ள கட்சி நிர்வாகிகள், அலுவலக ஊழியர்கள் உள்பட 110 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாநில துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், அலுவலக ஊழியர்கள் உள்பட 24 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.

பா.ஜ.க. அலுவலகத்தில் சமூகஇடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூடியதாலேயே கொரோனா பரவியதாக ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இதனை பா.ஜ.க மறுத்துள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு