செய்திகள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சைக்கிள் பேரணி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், ஐகோர்ட்டு ஆகியவற்றில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் சார்பில் அமைதி, அகிம்சை ஆகியவற்றை வலியுறுத்தி வெள்ளை உடையில் சைக்கிள் பேரணி நடந்தது.

பழவந்தாங்கல் மத்திய தொழில் பாதுகாப்பு படை வளாகத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணியை மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பழவந்தாங்கல், மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை, பல்லாவரம் வழியாக சென்ற சைக்கிள் பேரணி, சென்னை விமான நிலையத்தில் முடிவடைந்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்