செய்திகள்

ஹாங்காங்கில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் தங்கம் பறிமுதல் ரூ.9 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது

ஹாங்காங்கில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.22½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மலேசியா கடத்த முயன்ற ரூ.9 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னைக்கு ஹாங்காங்கில் இருந்து விமானம் வந்தது. விமானத்தில் சென்னையை சேர்ந்த அசாருதீன் (வயது 35), கவுதம் (32), ரியாஸ்கான் (35) ஆகியோர் வந்தனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவர் களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர்.

SCROLL FOR NEXT