மாவட்ட செய்திகள்

ரசாயனம் தடவிய 200 கிலோ மீன்கள் பறிமுதல்

பெரியகுளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரசாயனம் தடவிய 200 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரியகுளம்:

பெரியகுளம் தென்கரை சுதந்திர வீதி பகுதியில் மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் நேற்று மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென்று சோதனையிட்டனர். இதில் மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பார்மலின் ரசாயனம் தடவி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கடைகளில் இருந்த 200 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை பினாயில் ஊற்றி குப்பைத் தொட்டியில் கொட்டினர். இந்த மீன்களை விற்ற கடைக்காரர்களிடம் நகராட்சி சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...