மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்

போதை பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டறியும் பணியில் ஈடுபட சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகாவில் மோப்ப நாய் பிரிவை தொடங்கி வைத்து மோப்ப நாய்களான ஒரியோ, ஆர்லியோ ஆகியவை ஒப்படைக்கும் விழா நடந்தது.

தினத்தந்தி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனரகம் மூலமாக விமான நிலையம் மற்றும் சரக்கக பிரிவானது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சுங்க விதிகளுக்குட்பட்டு தங்கம், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருட்களை கொண்டு வருகிறார்களா? என்பதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் போதை பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டறியும் பணியில் ஈடுபட சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகாவில் மோப்ப நாய் பிரிவு என புதிதாக தொடங்கப்பட்டது. இந்த மோப்ப நாய் பிரிவை தொடங்கி வைத்து மோப்ப நாய்களான ஒரியோ, ஆர்லியோ ஆகியவை ஒப்படைக்கும் விழா நடந்தது. சென்னை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கர் தலைமை தாங்கினார்.

தமிழகம், புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி. மற்றும் சுங்க இலாகா தலைமை கமிஷனர் எம்.வி.எஸ்.சவுத்ரி பிரிவை தொடங்கி வைத்து மோப்ப நாய்களை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குனர் சரத்குமார், மத்திய தொழிற்படை டி.ஐ.ஜி. ஸ்ரீராம், சுங்க இலாகா கமிஷனர் பழனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்