மாவட்ட செய்திகள்

திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த 4 பேர் கைது

திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் பொன்முருகன் (வயது 31), குருசாமி மகன் பாபு (37), கணேசன் மகன் மனிஷ்குமார், தனசேகரன் மகன் சசிகுமார். இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் 4 பேரும் பெங்களூருவில் தலைமறைவாக இருந்தனர். இவர்களை கூடங்குளம் போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் 4 பேரும் சொந்த ஊருக்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் செட்டிகுளத்துக்கு சென்றனர். அங்கு ஊருக்கு வந்த 4 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்