மாவட்ட செய்திகள்

சோளிங்கர் நகராட்சியில் வரி, வாடகை பாக்கியை செலுத்தா விட்டால் நடவடிக்கை

வரி, வாடகை பாக்கியை செலுத்தா விட்டால் நடவடிக்கை

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் கடைகள், வாரசந்தை, தினசரி மார்க்கெட், பஸ் நிலைய கடைகள், சுங்கம் மற்றும் ஆடு அறுக்கும் தொட்டி ஆகியவற்றிற்கான வாடகை மற்றும் குத்தகை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் 27 வார்டுகளிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.