மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

அம்பை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அம்பை:

அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 31). இவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த வடிவேல் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று முன்தினம் வடிவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.