மாவட்ட செய்திகள்

ஆம்பூரில் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து ஆம்பூரில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆம்பூர்,

ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் எஸ்.ஆர்.தேவதாஸ் தலைமை தாங்கினார். மூர்த்தி, கருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ஹசேன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மனோகரன், ராஜ்குமார், சாமிக்கண்ணு, ராஜம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.