மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

திடீர் சோதனை

செங்கல்பட்டு அடுத்த பரனூரில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன தரச்சான்று பெற அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு லட்சுமிகாந்தன் தலைமையில் 12-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தீவிர விசாரணை

தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடமும், அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 3 மணியளவில் தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே போன்று இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்