மாவட்ட செய்திகள்

2-ம் கட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் 3,500 பேருக்கு பணி ஒதுக்கீடு

3,500 பேருக்கு பணி ஒதுக்கீடு

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் 2-ம் கட்டமாக நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று 3,500 பேர் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான குமாரவேல்பாண்டியன், மாவட்ட தேர்தல் பார்வையாளர் விஜயராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்