மாவட்ட செய்திகள்

முக்கூடலில் பரிதாபம்: 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

முக்கூடலில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

முக்கூடல்,

நெல்லை மாவட்டம் முக்கூடல் பூவையா தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். மும்பையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு அருணாஸ்ரீ (வயது 15), கிருஷ்ணவேணி ஆகிய 2 மகள்கள். 10-ம் வகுப்பு மாணவியான அருணாஸ்ரீ தற்போது பள்ளிக்கூட விடுமுறையில் உள்ளார். அவர் தினமும் வீட்டு வேலைகளை தாமதமாக செய்ததாக கூறப்படுகிறது.

இதனை நேற்று காலை ராமலட்சுமி கண்டித்துள்ளார். பின்னர் ராமலட்சுமி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்து. பலமுறை மகளை அழைத்தும் சத்தம் எதுவும் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சேலையால் அருணாஸ்ரீ தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு முக்கூடல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் முக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அருணாஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்