மாவட்ட செய்திகள்

போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகளை சாலையில் திரிய விட்ட 2 பேர் மீது வழக்கு

போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகளை சாலையில் திரிய விட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த திருத்தணி-திருப்பதி நெடுஞ்சாலையான பாண்டூர் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலையில் திரிந்த 5 பசுமாடு 2 கன்று குட்டிகள் என 7 கால்நடைகளை அப்புறப்படுத்தினார்கள். மேலும் கால்நடைகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலையில் விட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையான திருமழிசை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திருமழிசை பகுதியை சேர்ந்த லோகநாதன் (வயது 53) என்பவரது 4 கால் நடைகள் பொதுமக்களுக்கும், போக்குவரத்தும் இடையூறு ஏற்படும் விதமாக சாலையோரம் படுத்து கிடந்தது. இதை தொடர்ந்து போலீசார் லோகநாதன் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை