மாவட்ட செய்திகள்

சத்ரபதி சிவாஜி மன்னராக முடிசூட்டியது மராட்டியத்தின் பொன்னான தருணம்: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பெருமிதம்

சத்ரபதி சிவாஜி மன்னராக முடிசூட்டியது மராட்டியத்தின் பொன்னான தருணம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

சிவாஜிக்கு மரியாதை

சத்ரபதி சிவாஜி 1674-ம் ஆண்டு ஜூன் 6-ந் தேதி மன்னராக முடிசூட்டிக்கொண்டார். மராத்தா சாம்ராஜ்யத்தை உருவாக்கியவரான சத்ரபதி சிவாஜி மன்னர் ராய்காட்டை தலைநகராக்கி அங்கு பல்வேறு கட்டிடங்களை கட்டினார். இந்தநிலையில் சத்ரபதி சிவாஜி மன்னராக முடிசூட்டி கொண்ட நாளையொட்டி, அவருக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மரியாதை செலுத்தினார். மேலும் முதல்-மந்திரி, சத்ரபதி சிவாஜி மாநில நலனில் அதிக அக்கறை கொண்டு இருந்ததாகவும், தாய் நாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்ததாகவும் தெரிவித்தார்.

பொன்னான தருணம்

மேலும் இது குறித்து முதல்-மந்திரி அலுவலகம் வௌயிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது:-

சத்ரபதி சிவாஜி மன்னராக முடிசூட்டிய நாளையொட்டி அவருக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மரியாதை செலுத்தினார். இந்த நாள் மராட்டியத்தின் இருதயத்தில் பொறிக்கப்பட்ட பொன்னான தருணம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...