பூந்தமல்லி,
திருவேற்காடு பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தனியாக நடந்தும், மொபட்டிலும் செல்லும் பெண்களை குறி வைத்து அடிக்கடி சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க திருவேற்காடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.
மேலும் சங்கிலி பறிப்பு நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.