மாவட்ட செய்திகள்

ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு சினிமா படம் பார்த்து சங்கிலி பறித்த வாலிபர் கைது

ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு, “மெட்ரோ” சினிமா படம் பார்த்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

திருவேற்காடு பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தனியாக நடந்தும், மொபட்டிலும் செல்லும் பெண்களை குறி வைத்து அடிக்கடி சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க திருவேற்காடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.

மேலும் சங்கிலி பறிப்பு நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...