மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள ஆர்.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சர்மிளா (வயது 18).

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள ஆர்.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சர்மிளா (வயது 18). பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 1-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த சர்மிளா, வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை