துறையூர் அருகே இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோதல்
துறையூரை அடுத்த சேனப்பநல்லூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நுங்கு வெட்டுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பை சேர்ந்த குணசேகரன் (வயது 33 ) கலியமூர்த்தி (37) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.