மாவட்ட செய்திகள்

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

காரியாபட்டி அருகே விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

காரியாபட்டி,

காரியாபட்டி, எஸ். கடமங்களம் விலக்கு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் நகைக்கடை அதிபர் ராமகிருஷ்ணன் பலியானார். இதில் காயமடைந்த முருகேசன் (வயது 52), பிச்சை (40) ஆகிய 2 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி முருகேசன் பலியானார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.