மாவட்ட செய்திகள்

ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார்

காரைக்குடி,

காரைக்குடியை அடுத்த கோட்டையூர் ஸ்ரீராம்நகர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு முதியவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார். விசாரணையில் இறந்த நபர் காரைக்குடி டி.டி. நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜரெத்தினம் (வயது 69) என்றும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...