மாவட்ட செய்திகள்

தென்காசியில் புதிய வேளாண் சட்ட நகல்களை கிழித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்

தென்காசியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் புதிய வேளாண் சட்ட நகல்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

தென்காசி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, அவற்றின் நகல்களை கிழித்து, அனைத்து தொழிற்சங்கத்தினர் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் வன்னிய பெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் அயூப்கான், வட்டார செயலாளர் கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் கணேசன், முருகையா, பீடி தொழிலாளர் சங்கம் வள்ளிநாயகம், கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை