மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே அதிக அளவில் மது குடித்தவர் சாவு

காஞ்சீபுரம் அருகே அதிக அளவில் மது குடித்தவர் பரிதாபமாக இறந்தார்.

மது குடித்தார்

காஞ்சீபுரத்தை அடுத்த கொட்டவாக்கம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் விஜி (வயது 25), இவர் அதே பகுதிகளில் உள்ள வீட்டுக்கே சென்று முடி திருத்தும் தொழில் செய்து வந்தார்.

விஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குடிபழக்கம் உடைய விஜி நேற்று கொட்டவாக்கம் ரோட்டு தெருவில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

சாவு

விஜியை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...