வளவனூர்,
வளவனூர் அருகே மேட்டுப்பாளையம் ராசம்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 67). இவருக்கும், தாய் மாமன் மனைவி பாஞ்சாலிக்கும் நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இதில் மனமுடைந்த கோவிந்தராஜ் தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.