மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம்

பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது, 30 மாற்றுத்திறனாளிகள் மனுக்களை அளித்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதற்கு கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் சாந்தா கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் வேலைவாய்ப்பு, மூன்று சக்கர வாகனம், அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, இலவச பஸ் பாஸ் போன்றவைகள் கேட்டு 30 மாற்றுத்திறனாளிகள் மனுக்களை அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் ஒருவருக்கும், சுய தொழில் தொடங்க வங்கி கடன் ரூ.10 ஆயிரம் பெற ஒருவருக்கு ஆணை என 8 பேருக்கு ரூ.1 லட்சத்து ஆயிரத்து 440 நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...