நாமக்கல்,
மரவள்ளி உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் 17,500 ஹெக்டேர் பரப்பளவில் ஆண்டுதோறும் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது வரை 15,644 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ளது. மரவள்ளியில் தற்போது மாவுப்பூச்சி தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. தற்சமயம் நிலவி வரும் அதிக வெப்பநிலையின் காரணமாக மாவுப்பூச்சிகளின் தாக்கம் அதிகமாக தென்படுகிறது.