மாவட்ட செய்திகள்

கோட்டூரில், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் - இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நடந்தது

கோட்டூரில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பஸ் நிறுத்தம் அருகில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் ஒன்றியக்குழு சார்பில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரி சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை, ஒன்றிய செயலாளர் உஷா, ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தமயந்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு