பாளையங்கோட்டையில் ஒரே நாள் இரவில் துணிகரம்: வங்கி ஊழியர் உள்பட 6 பேர் வீடுகளில் 55 பவுன் கொள்ளை பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
பாளையங்கோட்டையில் ஒரே நாள் இரவில் வங்கி ஊழியர் உள்பட 6 பேர் வீடுகளின் பூட்டை உடைத்து 55 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பிரண்ட்ஸ் காலனியைச் சேர்ந்தவர் செந்தில் மகாராஜன் (வயது 30), வங்கி ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவில் தன்னுடைய மனைவி, குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள மாமியாரின் வீட்டுக்கு சென்றார்.