மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் விளக்கொளி பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா

காஞ்சீபுரம் விளக்கொளி பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா வாண வேடிக்கைகளும் நடைபெற்றது.

தினத்தந்தி

காஞ்சீபுரத்தில் உள்ள புகழ் பெற்ற விளக்கொளி பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் பெருமாள் அவதரித்த கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

மழையின்மை காரணமாக கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு தெப்பத்திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு கோவில் குளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்ததால் தெப்பத்திருவிழா நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் விளக்கொளி பெருமாள், மரகதவல்லி தாயார், தேசிகன் சாமிகள் ஒன்றாக இணைந்து சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 7 சுற்று வலம் வந்தனர். வாண வேடிக்கைகளும் நடைபெற்றது.

இதனையடுத்து சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன. விழாவில் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், குமரகோட்டம் முருகன் கோவில் செயல் அலுவலர் பரந்தாமகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து