மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மரை கீழே இறக்கி காப்பர் கம்பி, ஆயில் திருட்டு

மின்சாரத்தை துண்டித்துவிட்டு டிரான்ஸ்பார்மரை கீழே இறக்கி காப்பர் கம்பி, ஆயிலை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

தண்டராம்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தில் மின்சார டிரான்ஸ்மார் உடைக்கப்பட்டு கீழே கிடப்பதாக தண்டராம்பட்டு மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது, டிரான்ஸ்பார்மருக்கு செல்லக்கூடிய மின்சாரத்தை துண்டித்துவிட்டு, மர்ம நபர்கள் அதனை கீழே இறக்கி அதற்குள்ளாக இருக்கக்கூடிய காப்பர் கம்பி, ஆயில் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 84 ஆயிரம் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உதவி செயற் பொறியாளர் அண்ணாதுரை தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...