மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணி: தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக மின்சார ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தினத்தந்தி

தாம்பரம்,

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 8.01, 9.18 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலும், செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரவு 10.15, 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையிலும் நாளை(திங்கட்கிழமை)பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* கடற்கரை-செங்கல்பட்டு இடையே அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, 6.05, 6.43 மணி, மாலை 5.18 மணி, இரவு 8.01, 9.18 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலும், செங்கல்பட்டு-கடற்கரை இடையே அதிகாலை 3.55, 4.35, 4.50, 6.40, 6.55, 8.40 மணி, இரவு 7.25, 10.15, 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையிலும் நாளை மறுநாள்(12-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை