மாவட்ட செய்திகள்

மக்காச்சோளம் விளைச்சல் அமோகம்

ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளம் விளைச்சல் அமோக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தினத்தந்தி

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளம் விளைச்சல் அமோக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மக்காச்சோள சாகுபடி

ஆலங்குளம் அருகே உள்ள தொம்பகுளம், ஆர்.ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களில் கோடைகால பயிரான மக்காசோளம் 60 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் கிணற்று பாசனம் மூலம் நல்ல தண்ணீர் உள்ள கிணற்றை நம்பிதான் மக்காச்சோளம் சாகுபடி செய்ய முடியும்.

இந்தநிலையில் கோடைமழை தொடர்ச்சியாக பெய்த காரணத்தால் மக்காச்சோள பயிருக்கு தண்ணீர் தட்டுபாடு இன்றி கிடைத்தது.

யூரியா உரம்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற விவசாயிகள் மக்காச்சோளத்தை சாகுபடி செய்துள்ளோம். பெரும்பாலும் கிணற்று நீரை நம்பி தான் சாகுபடி செய்வோம்.

தற்போது கோடைமழை தெடர்ச்சியாக பெய்தததால் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணியை மேற்கொண்டு உள்ளோம். யூரியா போன்ற உரங்களும் தட்டுப்பாடின்றி கிடைத்தது. இதனால் 90 நாளில் நன்றாக விளைந்து கதிர் வாங்கக்கூடிய நிலையில் உள்ளது. இதனால் ஏக்கருக்கு 20 குவிண்டால் வரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். மக்காச்சோளம் விளைச்சல் அமோக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்