மாவட்ட செய்திகள்

மாசித் தெப்ப திருவிழா

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின், 15-ம் ஆண்டு மாசித் தெப்ப திருவிழா கடந்த 24-ந் தேதி துவங்கியது.

தினத்தந்தி

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின், 15-ம் ஆண்டு மாசித் தெப்ப திருவிழா கடந்த 24-ந் தேதி துவங்கியது.

நேற்று முன்தினம் மாலை முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர், கோவிலின் அருகே உள்ள திருக்குளத்தில் சுவாமி 9 முறை தெப்பத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் பின்னர், ஊராட்சி மன்ற தலைவர் மதன் என்ற சத்யராஜ் ஏற்பாட்டில் 5-ம் ஆண்டாக 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திருக்கண்டலம் ஊராட்சியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை