நம்பியூர்,
நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நம்பியூர் பஸ் நிலையம் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் பஸ் நிலையம் எதிரே ரவுண்டானா அமைக்கும் பணியும் ரூ.1 கோடி செலவில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இங்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திடீரென வந்தார்.
பின்னர் பணியை ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது கருப்பண கவுண்டர், சேரன் சரவணன், செல்வம், அரசு வக்கீல் கங்காதரன், நம்பியூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தம்பி என்கிற சுப்ரமணியம், நம்பியூர் பேரூராட்சி செயல் அதிகாரி கணேசன், நம்பியூர் தாசில்தார் உமாமகேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.