மாவட்ட செய்திகள்

நாமகிரிப்பேட்டையில் அதிகாரிகள் ஆய்வு: தறிப்பட்டறையில் பணியாற்றிய சிறுமி மீட்பு

நாமகிரிப்பேட்டையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் போது, தறிப்பட்டறையில் பணியாற்றிய சிறுமியை மீட்டனர்.

தினத்தந்தி

நாமக்கல்,

தொழிலாளர் உதவி ஆய்வாளர் சுதா தலைமையில் நாமகிரிப்பேட்டை பகுதியில் குழந்தை தொழிலாளர் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது தறிப்பட்டறையில் பணியாற்றிய சிறுமி மீட்கப்பட்டார்.

பின்னர் அந்த சிறுமியை கலெக்டர் ஆசியா மரியம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கலெக்டர் அந்த சிறுமியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த கூட்டாய்வில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் அந்தோணி ஜெனிட் மற்றும் திட்ட களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். இது போன்ற ஆய்வுகள் தொடரும் என்று தொழிலாளர் உதவி ஆய்வாளர் சுதா கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்