காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த கற்பகம், மலர்விழி, சிவஜோதி ஆகிய 3 பேரின் குடிசை வீடுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. இது பற்றி அறிந்த காங்கிரஸ் பிரமுகரும் தொழில் அதிபருமான மணிரத்தினம் கண்டமங்கலம் கிராமத்துக்கு சென்று, அங்கு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 3 பேரின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது நிர்வாகிகள் மணிமொழி, அண்ணாதுரை, ஷானுஜாக்கீர், கலியபெருமாள், ராமலிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.