செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை பெரிய ஏரியின் தென்பகுதியில் ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் அப்பகுதியில் குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று அப்பகுதியில் உள்ள 6 ஏக்கர் விவசாய நிலங்களில் வேலிகளை அகற்றி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் ஏரியை மீட்டனர்.