சோமரசம்பேட்டை, ஆக. 28-
திருச்சி ராம்ஜிநகர் கடைவீதியில் போலீசார் ராந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, காந்தி நகரை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 42) என்பர் ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை ராம்ஜிநகர் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் கொத்தமங்கலத்தை சேர்ந்த பார்த்திபனின் மனைவி மஞ்சுளா (50) 1 கிலோ கஞ்சா வைத்து இருந்ததாக கைது செய்யப்பட்டார்.