விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது43). இவர் முத்தால்நகர் பகுதியில் 109 மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பாண்டியன்நகர் போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் மாரிச்செல்வதை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.