அதில் அங்கு சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிந்தது. இது தொடர்பாக வெங்கடேசன்(வயது 29), பொன்னுசாமி(56) உட்பட 15 பேரை கைது செய்தனர். கைதானவர்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் மற்றும் 15 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து சூதாட்ட கிளப் நடத்திய திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான அனைவரும் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.