காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள ஏ.மோட்டூரை சேர்ந்தவர் தவமணி. இவரது மகள் மோகனா (வயது15). இவள் மேட்டுகுழியூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவி இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த மாணவி மோகனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.