மாவட்ட செய்திகள்

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மத்திய சுகாதார குழு ஆய்வு

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு நடத்தினர்.

தினத்தந்தி

தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் தூய்மை பணிகள், சுகாதார பணிகளை ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து மத்திய சுகாதார குழுவை சேர்ந்த காமராஜ், செல்வகுமார் ஆகியோர் தண்டராம்பட்டு ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து பதிவேடுகளையும், ராயண்டபுரம் ஊராட்சிக்கு சென்று கள ஆய்வு பணிகளையும் மேற்கொண்டனர்.

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.பி.மகாதேவன், பரிமேலழகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை