மாவட்ட செய்திகள்

மாணவிக்கு மிரட்டல் கல்லூரியில் படிக்கும் சக மாணவன் கைது

சமூக வலைதளம் மூலம் மாணவிக்கு மிரட்டல் விடுத்த மாணவன் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டை பாரதி நகரை சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மகன் பிரேம்குமார் (வயது 20). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

இவரது கல்லூரியில் சின்னக்கடை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரும் படித்து வந்தார். அந்த மாணவியை பிரேம்குமார் காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியுடன் பிரேம்குமார் தகராறில் ஈடுபட்டாராம். மேலும் சமூக வலைதளம் மூலம் மாணவிக்கு மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்து மாணவியின் தாய் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...