மாவட்ட செய்திகள்

செய்யாற்றில் இருகரையையும் தொட்டு செல்லும் தண்ணீர்

செய்யாறில் இருகரையையும் தண்ணீர் தொட்டு செல்கிறது

செங்கம்

செய்யாறில் இருகரையையும் தண்ணீர் தொட்டு செல்கிறது.

செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக கடந்த 24-ந் தேதி முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குப்பநத்தம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் செங்கம் பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர் வழி தடங்கள் மூலம் செல்கின்றது.

தண்ணீர் திறப்பால் செங்கம் செய்யாற்றில் இருகரையையும் தொட்டு தண்ணீர் சென்று கொண்டிருக்கின்றது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.