திருப்பூர்,
ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. பல பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்து இருந்தது.