மாவட்ட செய்திகள்

நாமக்கல்லுக்கு 2,300 டன் தவிடு சரக்கு ரெயிலில் வந்தது

நாமக்கல்லுக்கு 2,300 டன் தவிடு சரக்கு ரெயிலில் வந்தது.

நாமக்கல்,

நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு வடமாநிலங்களில் இருந்து தீவன மூலப்பொருட்கள் சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 2,300 டன் தவிடு சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது.

நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து இந்த தவிடு மூட்டைகள் 120 லாரிகளில் ஏற்றப்பட்டு கோழிப்பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.