மாவட்ட செய்திகள்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 361 போலீசார் இடமாற்றம்

தஞ்சை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 361 போலீசாரை இடமாற்றம் செய்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு, போக்குவரத்து புலன் விசாரணை பிரிவு என மொத்தம் 53 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இது தவிர கட்டுப்பாட்டு அறை, துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவையும் உள்ளன. இந்த அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசார் இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி தற்போது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர், போலீஸ் ஏட்டு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 361 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

இவர்கள் அனைவரையும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாறுதல் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு