மாவட்ட செய்திகள்

மாமல்லபுரம் பேரூராட்சியில் பழங்குடி இருளர் பெண் முதல் முறையாக கவுன்சிலராக பதவியேற்பு

மாமல்லபுரம் பேரூராட்சியில் பழங்குடி இருளர் பெண் முதல் முறையாக அ.தி.மு.க. சார்பில் கவுன்சிலராக பதவி பிரமாணம் ஏற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சியில் அ.தி.மு.க.வை சேர்ந்த 9 கவுன்சிலர்களும், தி.மு.க.வை சேர்ந்த 5 கவுன்சிலர்களும், ம.தி.மு.க. வை சேர்ந்த ஒரு கவுன்சிலர் என மொத்தம் 15 கவுன்சிலர்கள் நேற்று பதவிபிரமாணம் ஏற்றனர். அவர்களுக்கு மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற வரலாற்றில் முதல், முறையாக அ.தி.மு.க. சார்பில் 10-வது வார்டான பூஞ்சேரியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த பெண் மஞ்சு என்பவர் பதவி பிரமாணம் ஏற்றார். 5-வது பேரூராட்சி மன்றத்தில் முதல், முறையாக பழங்குடி இருளர் பெண் ஒருவர் பதவி ஏற்பது இதுவே முதல் முறையாகும்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்