மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி வழியாக சேலம் சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர், கிருஷ்ணகிரி வழியாக சேலம் சென்றார்.

கிருஷ்ணகிரி,

முன்னதாக கிருஷ்ணகிரியில் ஆவின் மேம்பாலம் அருகில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதே போல கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரி, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...