பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சி பகுதியில் பல இடங்களில் ஒரு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த இரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து நகராட்சி அலுவலர்களிடம், அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.