மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உலக செவிலியர் தின விழா

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக செவிலியர் சேவையின் முன்னோடி மங்கை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.

தினத்தந்தி

விழாவுக்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) குருநாதன் தம்பையா தலைமை தாங்கினார். அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கல்பனா பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிலைய மருத்துவ அலுவலர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அதிகாரிகள், பணியாளர்கள், செவிலியர்களின்

கண்காணிப்பாளர்கள் மற்றும் செவிலியர்கள் பலரும் ஒவ்வொருவராக வரிசையில் வந்து உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை