செய்திகள்

‘இந்தியாவை காங்கிரஸ் அவமதிக்கிறது’ - பா.ஜனதா குற்றச்சாட்டு

இந்தியாவை காங்கிரஸ் அவமதிக்கிறது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அமெரிக்காவின் முன்னாள் தூதர் நிக்கோலஸ் பர்ன்சுடன் சமீபத்தில் உரையாடிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா மற்றும் அமெரிக்காவின் அடையாளமாக விளங்கிய திறந்த நிலை மற்றும் சகிப்புத்தன்மையின் மரபணு மறைந்து விட்டதாகவும், பிரிவினையை உருவாக்குபவர்கள் தற்போது தங்களை தேசியவாதிகள் என கூறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கு நேற்று பதிலளித்த மத்திய மந்திரியும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான முக்தர் அப்பாஸ் நக்வி காங்கிரசை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் பேசும்போது, காங்கிரஸ் கட்சி இன்னும் நிலபிரபுத்துவ சட்டமுறையிலேயே இருக்கிறது. இந்தியாவின் சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்க மரபணுவை காங்கிரசால் பார்க்க முடியாது என்று தெரிவித்தார்.

சகிப்பின்மையால் கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டவர் பிரதமர் மோடி என்று கூறிய நக்வி, இந்த கொரோனா காலத்தில் நோய்தொற்றை கட்டுப்படுத்த துணை நிற்காமல் அரசியல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும், இந்த இடுக்கண் நேரத்திலும் இந்தியாவை காங்கிரஸ் அவமதிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்